Wednesday, September 9, 2009

சங்க அக இலக்கியத் திணைப்பகுப்பு – மறு கட்டமைப்பு

சங்க அக இலக்கியத் திணைப்பகுப்பு – மறு கட்டமைப்பு

சங்க இலக்கியம் ‘திணையிலக்கியம்’ என அழைக்கப் பெறும் சிறப்பினையுடையது. இவ்விலக்கியத்துள்;, முல்லை முதலிய அகத் திணைப்பகுப்புகளை மறுகட்டமைப்பு செய்யவேணடியது அவசியமாக உள்ளது. மறுகட்டமைப்பிற்கான காரணங்களையும், மறுகட்டமைப்பிற்குரிய முறைகளையும் எடுத்தியம்பிய சங்க இலக்கியத்துள் முல்லை எனக்குறிக்கப்பெறும் பாடல்களை; மறு கட்டமைத்தல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மறுகட்டமைப்பு செய்யவேண்டிய அவசியம்•

  • தொல்காப்பியம் அகத்திணை ஏழு எனக்குறிக்கின்றது. சான்றோர்கள் சங்க இலக்கியத்துள் காணப்படும் கைக்கிளை, பெருந்திணைப் பாடல்களை அடையாளப்படுத்தியுள்ளனர். எனினும் அகத்திணைப்பகுப்பில் ஐந்திணைப் பெயர்களை மட்டுமே காணமுடிகின்றதே தவிர எழுதிணைக்குரிய பகுப்புகளைக் காணமுடியவில்லை.
  • திணை இலக்கியப் பாடுநெறியில் திணைமயங்காப்பாடல்களும் பாடப்பெறும் திணைமயக்கப் பாடல்களும் பாடப்பெறும். சங்க அக இலக்கியத்துள் திணைமயங்காப் பாடல்களும் திணைமயக்கப் பாடல்களும் காணப்படுவதைப் பல்வேறு ஆய்வுகள் எடுத்துரைத்துள்ளன. எனினும் சங்க அக இலக்கியத் திணைப்பகுப்பில் கொடுக்கப் பட்டிருக்கும் பெயர்கள் திணைமயக்கப் பாடல்களையும் திணைமயங்காப்பாடல்களையும் தனித்தனியே அடையாளப் படுத்துவதாக அமையவில்லை.•
  • அகத்திணைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய (பாடு;பொருள்) உரிப்பொருள் வரையறை செய்யப் பட்டுள்ளன. எனினும் சங்க இலக்கியத்துள் முல்;லை முதலியனவாகக் குறிக்கப்பெறும் திணைகளுள் அத்திணைக்குரிய பாடுபொருளின்றி வேறு திணைக்குரிய பாடுபொருளையும் காணமுடிகின்றது.
  • “குறுந்தொகை, நற்றிணை என்னும் நூல்களைப் பொறுத்தளவில் திணை பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லாமலேயே அவற்றின் மூலச் சுவடிகள் உள்ளன. இந்நூல்களைத் தற்காலத்தில் பதிப்பித்த பதிப்பாசிரியப் பெருமக்களே இந்நூல்களிலுள்ள பாடல்களுக்குத் திணை பற்றிய குறிப்புகளைக் கொடுத்துப் பதிப்பித்துள்ளனர்”1 என்பர் அ.பாண்டுரங்கன். பிற்காலத்தில் திணை குறித்துப் பதிப்பித்த ஆசிரியர்களும் தங்களுக்குள் வேறுபடுகின்றனர். “குறுந்தொகைக்குத் திணை வகுத்ததில் முன்னோடியான தி.சௌ.அரங்கனாரைப் பின்பற்றித் திணை வகுக்கும் மர்ரே எஸ்.இராசம் 9 இடங்களிலும் சாமி சிதம்பரனார் 5 இடங்களிலும் திணை வேறுபடுகின்றனர். மர்ரே எஸ்.இராசம் அவர்களைப் பின்பற்றும் புலிய+ர்க்கேசிகன் ஓர் இடத்திலும், மு. சண்முகம் பிள்ளை 4 இடங்களிலும் வேறுபடுகின்றனர்”2 என்பர் ஆ.மணி. இவ்வாறு காணப்படும் பல வேறுபாடுகள் இலக்கிய ஆர்வத்திற்கும் ஆய்விற்கும் தடையாக அமைந்துவிடுதலும் உண்டு. •
  • குறுந்தொகைப் பாடல்களுக்குக் கூற்றுமுறையில் தலைப்பிட்ட உ.வே. சாமிநாதய்யர், “ஒவ்வொரு செய்யுளும் இன்னாருடைய கூற்று என்பதைத் தலைப்பில் அமைத்திருக்கின்றேன். திணைப்பெயரைத் தலைப்பிடுதல் அகநானூற்றினுள் கண்டதாயினும் பொருளில்; கருத்துச் செல்வதற்கு இம்முறை தக்கதென்று தோற்றியது”3 என்று குறிக்கின்றார். இதனுள் கருதத்தக்கது ‘தலைப்பிடுதல்’ எனும் சொல்லாகும். இதனால் சங்கப்பாடல்களுக்குத் திணைப்பெயரில் தலைப்பிட்டுள்ளார்களே தவிர திணைப்பகுப்புச் செய்திலர் என்பதை உ.வே சா வின் கருத்தாகக் கொள்ளமுடியும். இதற்கு, ஐங்குநூற்றில் பத்துக்களாகத் தலைப்பிட்டிருப்பதும் நெடும்பாடல்களுள் ‘குறிஞ்சிப் பாட்டு’ ‘முல்லைப் பாட்டு’ ‘நெடுநல்வாடை’ ‘பட்டினப்பாலை’ எனத்தலைப்பிட்டிருப்பதும் சான்றாக அமைகின்றன.
    மறுகட்டமைப்பிற்குரிய முறைகள்
  • அகத்திணைகள் ஏழு என்பதையும் அதற்குரிய பாடுபொருள் வரையறைகள் இவை யென்பதையும் தெளிவு செய்யது, சங்க அகப்பாடல்களின் பாடுபொருளை உரிப்பொருளின் அடிப்படையில் எந்தத்திணைக்குரியன என்பதைக் கண்டறிய வேண்டும்.
  • திணைக்கூறுகள் முதல,; கரு, உரி என மூவகையின. இவற்றுள் உரிப்பொருளுக்கே முதன்மை தர வேண்டும். ஒரு பாடல் முதல் கருப்பொருள் இன்றிப் பாடப்பெறலாம் ஆனால் உரிப்பொருளின்றிப் பாடப்பெறுவதில்லை. உரிப்பொருளைப் பாடுதலே புலவனின் நோக்கமாகும்.. முதலும் கருவும் உரிப்பொருளைச் சிறக்கச் செய்யும் துணைக்கூறுகளேயன்றி முதன்மைக் கூறுகளாக அமையாதன.
  • உரிப்பொருளின் அடிப்படையில் கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம,; நெய்தல் பெருந்திணை எனத் திணைகள் குறிக்கப் பெறவேண்டும்.
    • திணைமயங்காப் பாடல்கள் கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல,; பெருந்திணை என்றும் திணைமயக்கப் பாடல்கள் ‘முல்லையுள் குறிஞ்சி’, ‘முல்லையுள் பாலை’, ‘முல்லையுள் மருதம’;, ‘முல்லையுள் நெய்தல்’; எனும் முறையிலும் குறிக்கப் பெற வேண்டும். இம் முறையில் ‘முல்லையுள் பாலை’, என்றால் முல்லையின் பாடுபொருளுடன் பாலையின் முதல் கரு மயங்கிய திணை மயக்கம் என்பது பொருளாகும்.
  • ஓர் உரிப்பொருளுடன் பல திணைகளுக்குரிய முதல் கருப்பொருள்கள் காணப்படின் அப்பாடல்களுக்கு ‘முல்லையுள் குறிஞ்சியும் மருதமும் என்றும் ‘முல்லையுள் குறிஞ்சியும் பாலையும் மருதமும்’ என்ற முறையில் திணை குறித்தல் வேண்டும்.
  • கைக்கிளை, பெருந்திணைகளுக்குத் தனியே முதல் கருப்பொருள்கள் வரையறை செய்யப் பெறவில்லை எனவே இத்திணைகள் எந்தத்திணைக்குரிய முதல் கருவுடன் வரினும் அம்முதல் கருப்பொருட்கள் அத்திணைக்குரியனவாகக் கொள்ளப்படும்.

முல்லைத் திணைகள் மறுகட்டமைப்பு

சங்க இலக்கியத்துள் முல்லை எனும் திணைப் பெயரையுடைய பாடல்கள் 234 காணப்படுகின்றன. இவற்றுள் முல்லையின் உரிப்பொருளையுடையன 194 பாடலகள். பிறதிணையின் உரிப்பொருளையுடைய பாடல்கள் 40.
முல்லையின் பாடுபொருளையுடைய பாடல்கள் 194 இல் 136 பாடல்கள் முல்லை எனக் குறிக்கப்பெறுதற்குரியனவாக உள்ளன. இவற்றுள் பிறதிணையின் கூறுகள் எவையும் காணப்பெறவில்லை. எஞ்சிய 58 பாடல்கள் முல்லையின் உரிப்பொருளையுடையனவாக இருந்தபோதும் பிறதிணையின் முதல் கருவையும் உடையனவாக உள்ளன. அவை ‘முல்லையுள் குறிஞ்சி’ ‘முல்லையுள் பாலை’ ‘முல்லையுள் மருதம்’ ‘முல்லையுள் நெய்தல்’ எனக்குறிக்கப்பெறவேண்டியனவனவாக உள்ளன. பிறதிணையின் உரிப்பொருளையுடைய பாடல்கள் 40 இல் குறிஞ்சி பாலை மருதம் கைக்கிளைக்குரிய பாடல்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஏழு பாடல்கள் பிறதிணைக்கே உரிய திணைமயங்காப்பாடல்களாக உள்ளன. அவை மருதம் பாலை கைக்கிளைக்குரியனவாக உள்ளன. எஞ்சிய 33 பாடல்கள் திணைமயக்கப் பாடல்களாகும் இவை ‘குறிஞ்சியுள் முல்லை’ ‘பாலையுள் முல்லை’ எனக்குறிக்கத்தக்கனவாக உள்ளன. இப்பாடல்களை கீழ்வருமாறு அமைகின்றன.
முல்லைப்பாடல்களில் ‘மருதம்’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 2 : குறுந். 191, 370. முல்லைப்பாடல்களில் ‘பாலை’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 2 :ஐங். 426,429. கைக்கிளை எனக் குறிக்கத்தக்க பாடல்கள் - 3 : கலித். 109, 112, 113. முல்லைப்பாடல்களில் ‘ குறிஞ்சியுள் முல்லை’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 17 :குறுந். 233, 240, அகநா. 394, கலித். 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 110, 111, 114, 115, 116, 117.முல்லைப்பாடல்களில் ‘ பாலையுள் முல்லை’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 16 :நற். 226, ஐங். 423, 424, 427, 428, 430, 431, 432, 433, 434, 435, 436, 437, 438, 439, 440.முல்லைப்பாடல்களில் ‘முல்லையுள் குறிஞ்சி’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 33 :குறுந். 94, 108, 110, 190, 279, 319. நற். 89, 139, 161, 321, 371. அகநா. 4, 14, 24, 94, 114, 184, 264, 274, 284, 364. ஐங். 404, 416, 456, 460, 464, 469, 470, 479, 497, 498, 500. நெடுநல். முல்லைப்பாடல்களில் ‘முல்லையுள் பாலை’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 11 :குறுந். 24, 66, 314, 391. நற். 97, 99, 374, 394. அகநா. 164 ஐங். 452, 484.
முல்லைப்பாடல்களில் ‘முல்லையுள் மருதம்’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 12 :குறுந். 234 அகநா. 44, 84, 194, 204, 294, 304, 374. ஐங். 44,8 459 நற். 115, 242.முல்லைப்பாடல்களில் ‘முல்லையுள் நெய்தல்’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 2 :குறுந். 387. முல்லைப்பாட்டு.



முடிவுரை•

இக்கட்டமைப்பால் முல்லை எனக்குறிக்கப்பெறும் 234 பாடல்களில் 136 பாடல்கள் மட்டுமே முல்லைக்குரிய திணைமயங்காப்பாடல் என்பதும், மருதம் (2) பாலை(2) கைக்கிளை(3) எனும் திணைகளுக்குரிய திணைமயங்காப்பாடல்களும் இதனுள் காணப்படுகின்றன என்பதும் பெறப்படுகின்றது. • முல்லை எனக்குறிக்கப் பெறுவனவற்றுள் 33 பாடல்களில் பிறதிணையின் உரிப்பொருளுடன் முல்லையின் முதலும் கருவும் மயங்கியுள்ளன. அப்பாடல்கள் முதல் கருப்பொருளால் முல்லை எனக்குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை ‘குறிஞ்சியுள் முல்லை’ என்றும் ‘பாலையுள் முல்லை’ என்றும் குறிக்க வேண்டும். • முல்லை எனக் குறிக்கப்பெறுவனவற்றுள் 58 பாடல்களில் முல்லையின் உரிப்பொருளுடன் பிறதிணையின் முதலும் கருவும் மயங்கியுள்ளன. அப்பாடல்கள் ‘முல்லை’ எனக்குறிக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றை, அவற்றுள் காணப்படும் திணைமயக்கங் கருதி ‘முல்லையுள் குறிஞ்சி’, ‘முல்லையுள் பாலை’, ‘முல்லையுள் மருதம’;, ‘முல்லையுன் நெய்தல’; எனக்குறிக்கவேண்டும். • இவற்றால் முல்லையின் உரிப்பொருளுடன் எந்தத்திணையின் முதல் கருப்பொருள்கள் மயங்கியுள்ளன என்பதை எளிதில் பிரித்தறிய முடியும்;.
சான்றெண் விளக்கம்1. அ.பாண்டுரங்கன், திணைக்கோட்பாடு(கட்.) துழரயெடள ழக வுயஅடை ளுவரனநைள – 2002-1 ப. 22. இரா. சந்திரசேகரன், (ப.ஆ)சங்க இலக்கியம் பன்முகப் பார்வை ப. 813. உ.வே.சாமிநாதய்யர்(உ.ஆ), குறுந்தொகை மூலமும் உரையும் முகவுரை ப. ஓஏஐஐஐ